லிஸ்டீரியோசிஸ் நோய் பரவுவது குறித்து ஆய்வு செய்யுமாறு சன்ன ஜயசுமண கோரிக்கை!

லிஸ்டிரியோசிஸ் நோய் பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லிஸ்டீரியோசிஸ் நோயால் கண்டறியப்பட்ட ஒரு நோயாளி மருத்துவ கவனிப்பில் இருந்தபோது மருத்துவமனையில் காலமானார்.

இதன் காரணமாக லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பாக்டீரியாவால் அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் நோய் பரவுவது பற்றிய கவலைகள் எழுந்துள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.