பாடசாலை மாணவர்களின் சீருடைத் தேவையில் 80% விநியோகம் : கல்வி அமைச்சு!


பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 80% விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக சீனாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 70% சீருடைத் துணிகள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டத்தில், மீதமுள்ள 05 மாகாணங்களுக்கு 30% சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு சீருடைகள் விநியோகிக்கப்பட உள்ளன.