
(மண்டூர் ஷமி)
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (12) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருந்தையடிமுன்மாரி காஞ்சிரங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த (16) வயதுடைய கிஸ்ணமூர்த்தி ரணித்தா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
சம்பவ தினத்தன்று வழமை போல பாடசாலைகடகு சென்று வீடு திரும்பிய நிலையில் தாயாரிடம் கையடக்க தொலைபேசியை கேட்ட போது யுவதியின் தாயார் தொலைபேசியை கொடுக்க மறுத்ததாகவும் தாயார் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் தூக்கில் இருந்து உறவினர்கள் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.