மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆயுதங்கள் மீட்பு!

குதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளனர்.கும்புறுமுலை கடற்கரை அண்டிய பகுதியில் உள்ள முட்தரைப் பிரதேசத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் இந்த ஆயுதங்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசின் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.