'வைக்கோல் பட்டறை நாய் போல் நடந்து கொள்ள வேண்டாம்' கல்முனை சிவில் சமூகம் வேண்டுகோள்..

அண்மையில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் 

2014.03.01ம் திகதி Battinews.com    வெப்தளத்தில்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் , கல்முனை மாநகரசபையின் 04 உறுப்பினர்களும் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்கள்;. இவ்வறிக்கையில்



'கல்முனை சிவில் சமூகம் கல்முனையின் அப்பாவித் தமிழ் மக்களை பலிக்கடாவாக்கி வருதாகவும்,அவர்களை மிரட்டி அரசின் பக்கம் கொண்டு வந்து தமிழ் தேசியத்தினை நசுக்கி வருவதாகவும் அறிக்கை  விட்டுள்ளனர்'

இவர்கள் ஆறு பேரும் யானை பார்த்த குருடர்களை போன்று தமது அரசியல் சுயலாபங்களுக்காக வெறும் கையில் முழம் போடுகின்றனர். இவர்களின் அறிக்கையினை வாசித்த பின்னர் பின்வரும் வினாக்களை இவர்களிடம் கேட்கலாம் என கல்முனை சிவில் சமூகம் முனைகிறது. முடிந்தால் நேரடியாக விவாதத்திற்கும் நாம் தயார்....


  • ·கல்முனையில் இருந்து  முதன் முதலாக பொதுபலசேனாவினை சந்திப்பதற்கு கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களும், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்ததனை என்பதை  மறந்தா இவ்வறிக்கையினை விட்டுள்ளனர்.   
  • எங்களது கட்சியினால் ஒன்றுமே செய்யமுடியாது. நீங்கள் முன்னெடுங்கள் என்று எங்களை உசுப்பேற்றிய மாகாண சபை உறுப்பினர் எமக்கெதிராக அறிக்கை விடும்போது  தான் கூறியதைப் பற்றி யோசிக்கவில்லையா?
  • அம்பாறை மாவட்ட தமிழர்களை TNA  தலைமை முஸ்லீம்களுக்கு பட்டயம் போட்டு விற்று விட்டது. கிழக்குமாகாணத்தின் எல்லைகள் TNA-SLMC  யினால் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு விட்டது. அம்பாறை மாவட்ட தமிழர்களை TNA மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடாத்துகின்றது. எனவே இக்கட்சியில் இருப்பதில் எந்தப்பிரயோசனமும் இல்லை. இதனால் நான் அரச அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எனது மக்களுக்கு முடிந்ததை பெற்றுக் கொடுக்கப்போகிறேன் எனக்கூறி அவர்களுடன் சென்று உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் மாநகரசபை உறுப்பினர்களுக்கு அறிக்கை  விடும்; போது புரியவில்லையா?

மாகாண மற்றும் மாநகரசபை உறுப்பினர்களே!
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் பண்ணமுடியாது . கற்பனைத் தேரிலேறி பூச்சியங்களை தேடும் உங்களுக்கு எமது கல்முனை வாழ் தமிழ் சமூகம் சார்பில் கூறக்கூடியது ஒன்றுதான். 
நீங்கள் விரும்புவது வேறு,யதார்த்தம் வேறு. கிழக்கு தமிழர்களின் வாக்குகளை தேசிய உணர்வூட்டி, கவர்ந்து கிழக்கு மாகாண சபையினையும் முஸ்லீம்களிடம் தாரைவார்த்து விட்டீர்கள். அதன் விளைவை கிழக்குவாழ் தமிழர்கள் அனுபவிக்க தொடங்கிவிட்டனர். சற்றுபொறுங்கள் வெளிநாட்டிலிருந்து தீர்வினை இறக்குமதி செய்து தருகி
றோம் என்கின்றீர்கள் நாங்களும் 65 வருடகாலமாக மகாபாரத கதாபாத்திரங்களில் ஒன்றான யுதிஷ்டிரன் போன்று பொறுமை காத்து வந்தோம். இப்பொறுமை எமது பிரதேசத்தில் முஸ்லீம்களின் மேலாதிக்கத்தை தலைதூக்கவைத்ததே தவிர எவ்வித சமூக, பொருளாதார ,அரசியல் நன்மைகளையும் பெற்றுத் தரவில்லை என்பதே காலம் கற்றுத்தந்த பாடம்.

இப்பின்புலத்தில் தான் கல்முனை வாழ் தமிழர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய ஒருமாற்றுவழி  தந்திரோபாயத்தினை கல்முனை சிவில் சமூகம் முன்னெடுத்து வருகின்றது. இதுவரை காலமும்  கல்முனை சிவில் சமூகத்திடம் 'உங்கள் வழியோ சரியான வழி 'எனக் கூறிவந்த மாகாண,மாநகரசபை உறுப்பினர்கள் தற்போது தமது அரசியல் நாற்காலிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக்கருதி முன்னர் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது போன்று கல்முனையில் ஒரு சிறு குழுவொன்று தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்துகின்றது என அறிக்கை விட்டு பல்டி அடித்துள்ளீர்கள். இவ்வறிக்கையினை பார்க்கும் போது உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

அன்றுமுதல் இன்றுவரை அம்பாரை மாவட்ட தமிழ் சமூகத்தினை அரசுக்கு எதிரானவர்களாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாகவும் சித்தரித்து முஸ்லீம் சமூகம் தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்டி வந்துள்து. கல்முனை சிவில்சமூகத்தின் தற்போதய நகர்வு முஸ்லீம்களுக்கு அவர்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் பாரிய தலையிடியாக மாறியுள்ளது. 

இதே தலையிடி உங்களுக்கும் பிடித்துள்ளதனை உங்களது அறிக்கை வெட்டவெளிச்சமாக சுட்டிக்காட்டியுள்ளது எல்லாம் அரசியல் சுயநலம் தான். தயவுசெய்து உங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக பிச்சைகாரன் புண் அரசியல் வேண்டாம். அன்றாடம் ஒருவேளை உணவுக்காக முஸ்லீம் சமூகத்திடம் கையேந்தும் அண்றாடக்கூலிகள,; வறுமையில் வாடும் இளம்பெண்கள், விதவைகளின் சாபம் உங்களை சுட்டெரித்து விடும். ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று பாருங்கள. மருதமுனைசந்தி, கல்முனைக்குடிசந்தி, நிந்தவூர்சந்தி ,அக்கறைப்பற்று சந்திகளில் எமது தமிழ் இளைஞர்கள் மாற்றினத்திடம்; வேலைகேட்டு கையேந்தி நிற்பதனை!. எத்தனை கன்னிப்பெண்கள் மாற்றினத்தினது கடைகள், வீட்டுத் தொழிற்சாலைகளில் கையேந்தி நிற்கின்றார் என்பதனை! இதற்கு  உங்களிடம் தீர்வு உள்ளதா?

வறுமை காரணமாக எல்லைகளிலுள்ள தமிழர்களின் வளவுகள் நாளுக்குநாள் ஏனைய சமூகத்திற்கு விற்பனையாகின்றது. எமது கிராமங்கள் இரவுவேளைகளில் இருளில் மூழ்கிக்கிடக்கின்றது. மற்றய பிரதேசங்கள் சிங்கப்பூர் போன்று காட்சியளிக்கின்றது. வறுமையைப் பயன்படுத்தி கிராமப்புற தமிழ் பெண்களின் கற்புகள் சூறையாடப்படுகின்றது. கிழக்குமாகாண சபையில் 90மூமான நியமனங்கள் முஸ்லீம்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது. சகல அரச திணைக்களங்களிலும் மாற்றினத்தவர் வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றனா.; எமது பாடசாலைகள் அடிப்படை வசதிகளின்றி பெயரளவில் தேசியபாடசாலை எனும் நாமத்துடன் இயங்கிவருகின்றது. 

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வளங்கல் யாவும் திட்டமிட்ட அடிப்படையில் சுரண்டப்பட்டு வேறு வைத்தியசாலைக்கு நகர்த்தப்பட்டு வருகின்றது. தமிழ் எல்லைகளில் உள்ள வீதிகளின் பெயர்கள் முஸ்லீம் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றது.
இவ்வாறெல்லாம் கல்முனை தமிழ் சமூகத்தினை நசுக்கி,ஒடுக்கி,வலுவிழந்த சமூகமாக மாற்றுவதற்கு திரைமறைவில் முஸ்லீம் சமூகம் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றது. இவையெல்லாம் எமது மாகாண ,மாநகரசபை உறுப்பினர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கின்றார்களா?

எது எவ்வாறெனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை இவ்விவகாரத்தினுள் இழுத்து விடுவதன் மூலம்  பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் கோரிக்கையினை பலவீனப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முனைகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் சதிவலைக்குள் விழாமல் TNA இனரின் மாகாணசபை உறுப்பினர்களும் ,மாநகரசபை உறுப்பினர்களும் ஒதுங்கி இருந்து பார்வையாளராக  இருக்கவும் அல்லது உண்மையிலேயே கல்முனை வாழ் தமிழ் மக்களின் மீது ஆத்மார்த்த ரீதியான அக்கறை இருப்பின் அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால் நாற்காலி ஆசைகளை களைந்து விட்டு சிவில் சமூகத்துடன் இணைந்து பயணிக்க தயாராகவும். ஆரசியல் சாணக்கியங்கள் காலத்திற்கு ஏற்றால்போல் மாற்றமடையவேண்டும். இதை உணர்ந்து கொள்ளுங்கள். இதனை செய்ய முன்வராவிடின் அம்பாறை மாவட்ட தமிழர்கள் அதிலும் விஷேடமாக கல்முனை வாழ் தமிழ் சமூகம் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டாது.
 கல்முனை சிவில் சமூகம்.