ஆரையம்பதி இ.கி.மகா வித்தியாலயத்தில் நாணயக் கண்காட்சி

(சக்தி) 

மட்.ஆரையம்பதி இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் நாணயக் கண்காட்சி ஒன்று  நடைபெற்றது.

இக் கண்காட்சியானது  அந்தோனிசாமி எனும் தனிநபரின் முயற்சியால் நடாத்தப்பட்டது. இக்கண்காட்சியில் 200க்கு மேற்பட்ட நாடுகளின் நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள்  பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததன. இவற்றில் பல தொன்மைவாய்ந்ததும் தற்போது நடைமுறையில் இல்லாத நாணயத் தாள்களும் காணப்பட்டன.

இவர் 700க்கு மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இவற்றின் மூலம் நடைமுறையில் இல்லாத பழமை வாய்ந்த நாணயத் தாள்களை தற்போதும் மாணவர்கள் பார்iவிடக்கூடியதாய் அமைந்திருந்தன.

இக்கண்காட்சியில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இராமகிருஸ்ண மகா வித்தியாலய அதிபர் தங்கவடிவேல் ஆசிரியர்கள் மாணவர்கள் பர்வையிட்டனர்.