(சுபஜன்)
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவன் கோபாலபிள்ளை பிரதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குறித்த நபர்களை கைது செய்யுமாறும் இது ஒரு இனவாதத்தை தூண்டுவதற்காக திட்டமிட்டு நடாத்தப்பட்ட செயல் என்றும் கூறி இன்று (26) பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
தாக்குதல் நடாத்திய நபரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்திக் கொண்டிருந்த வேளையில் ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர்களான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கௌரவ பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரன் மாணவர்களுடன் இது தொடர்பில் உரையாடினர்.
இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கின்ற மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இது தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர் இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணர்கள் கலைந்து சென்றனர்.