(அனா )
கடந்த வியாழக்கிழமை (26.05.2016) முதலை பிடித்த ஒருவரின் தலைப்பகுதியும் கால்களின் எழும்பு பகுதியும் நேற்று சனிக்கிழமை (28.05.2016) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் எரிக்கலம்கட்டு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடந்த வியாழக்கிழமை முதலை பிடித்துச் சென்றுள்ளது
அவரது குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மூன்று தினங்கலாக அந்தப்பகுதியில் தேடிய நிலையிலயே நேற்று (சனிக்கிழமை) காலை 08.30 மணியளவில் காணாமல் போனவரின் தலைப்பகுதி ஒரு இடத்திலும் கால்களின் எழும்புப் பகுதிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி கந்தலிங்கம் (வயது – 63) என்று அடையாளங்கானப்பட்டுள்ளதுடன் இவர் அப்பகுதியில் வயல் காவல் வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில் தனது உணவுக்காக மீன்படிக்கச் சென்ற வேலையிலயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை (26.05.2016) முதலை பிடித்த ஒருவரின் தலைப்பகுதியும் கால்களின் எழும்பு பகுதியும் நேற்று சனிக்கிழமை (28.05.2016) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் எரிக்கலம்கட்டு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடந்த வியாழக்கிழமை முதலை பிடித்துச் சென்றுள்ளது
அவரது குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மூன்று தினங்கலாக அந்தப்பகுதியில் தேடிய நிலையிலயே நேற்று (சனிக்கிழமை) காலை 08.30 மணியளவில் காணாமல் போனவரின் தலைப்பகுதி ஒரு இடத்திலும் கால்களின் எழும்புப் பகுதிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி கந்தலிங்கம் (வயது – 63) என்று அடையாளங்கானப்பட்டுள்ளதுடன் இவர் அப்பகுதியில் வயல் காவல் வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில் தனது உணவுக்காக மீன்படிக்கச் சென்ற வேலையிலயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.