(ஷமி.மண்டூர்) வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி சுரவணையூற்றுப்பகுதியில் மனைவி உட்பட 4 பேரைத் மண்வெட்டியால் தாக்கியவருக்கு எதிர்வரும் 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி (29) வெள்ளிக்கிழமை உத்தரவு இட்டுள்ளார்.
கடந்த 28 ஆம்திகதி மாலை தனது மனைவி டிலக்ஷனா 18 வயது மற்றும் அவரது தந்தை தாய் மற்றும் அம்மம்மா,மாமா,மற்றும் சித்தி ஆகியோரைத் தாக்கி படுகாயமடையச்செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய டிலக்சனாவின் கணவரான தங்கவேல் 28 ஆம்திகதி வெல்லாவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு (29) வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிபதி எஸ்.றிஸ்வி முன்நிலையில் ஆஜர் படுத்தியபோது இவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவுவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.