மட்டக்களப்பு - பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரி ஆறு வயற் பிரதேசத்தில், காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் இன்று அதிகாலை (25) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேப்பவெட்டுவான் பாலர்சேனையைச் சேர்ந்த சிவராசா கமலநாதன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். காலைக் கடன்களைக் கழிக்க வந்து விவசாயி, புத்தம்புரி ஆற்றருகில் நின்றிருந்தபோது, காட்டுக்குள் இருந்து வந்த காட்டு யானை இவரைத் தாக்கி தண்ணீரில் அமிழ்த்தி விட்டுச் சென்றுள்ளது.
இதன்போது, அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4