(ரவிப்ரியா)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச்சங்கம் அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு ஆக்கபூர்வமான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இலக்கிய களம் நிகழ்வு மூலம். இலைமறை காய் தமிழ் இளம் கலைஞர்களுக்கும், அனுபவமிக்க கலைஞர்களையும் இணைத்து நடாத்தும் கருத்தாடற்களம் தமிழ் அபிமானிகளிடம் பேராதரவைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து நாளை (20.06.2017) செவ்வாய்க்கிழமை, இந்திய, இலங்கை முக்கிய அதிதிகள் சகிதம் திறந்து வைக்கின்றது. தமிழ் மணம் கமழ நிகழும் நிகழ்வு பற்றிய விபரம் பின்வருமாறு.
நிகழ்வை எமது இணையத்தளம் மற்றும் பேஸ்புக்கில் நாளை நேரடியாக பார்வையிடலாம்