பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச் சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியும் 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையுமான இராசதுரை துவேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரவு வீட்டை விட்டு வெளியேறியச் சென்ற குறித்த நபர் இன்று காலை வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில், பெரிகல்லாறு கடலாட்சியமன் வீதியில் பின்பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மலசல கூடக் குழியில் சடலமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.