பாடு மீன் சமரில் வெற்றிப்பெற்று பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு



“பாடு மீன்களின் சமர் ” 2019 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தை சுவிகரித்துகொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலைக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் “பாடு மீன்களின் சமர் ”என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் சமரின் 2019 ஆம் ஆண்டுக்கான கிரிகெட் சமர் கடந்த 09 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
இந்த கிரிக்கெட் சமரில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை வெற்றிபெற்று 2019 ஆம் ஆண்டுக்கான “பாடு மீன்களின் சமர் ” கிண்ணத்தை சுவிகரித்துகொண்டது .

“பாடு மீன்களின் சமரில் வெற்றிப்பெற்று பாடாசாலைக்கு பெருமை சேர்த்த புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்களை , அவர்களது பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி சாந்தினி தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் , பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்