புலமைபரீட்சையில் 100% சித்தியினை பெற்ற மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலயம்!!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

புலமைபரீட்சையில் 100% சித்தியினை பெற்று புனித திரேசா பெண்கள் வித்தியாலயம் சாதனையினை நிலைநாட்டியுள்ளது.

அண்மையில் வெளியாகிய 2022/2023 தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100% சித்தியினை பெற்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளதுடன், ஜுட்றொட்னி ஜனிபர் மாணவி வெட்டுபுள்ளிக்கு மேல் -153 புள்ளியையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இம் மாணவர்ககளுக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி.ஜெயராணிசிவகுமார் அவர்ளுக்கும், தரம் 1-5 வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் அதிபர் திருமதி.துஷ்யந்தி ஜெயவதனன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.