எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு !



பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பரிவர்த்தனைகளை கருத்திற் கொண்டு உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இம் மாதம் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.