அநுராதபுரம் , மாத்தறை மசாஜ் நிலையங்களில் விசேட சோதனை; 16 பெண்கள் கைது!



அநுராதபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் பரிசோதிக்க வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாத்தறை பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத மசாஜ் நிலையங்களில் பணிபுரியும் 12 பெண்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் காலி, கேகாலை ,கொழும்பு , புத்தளம் மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.