வட்டுக்கோட்டை இளைஞர் கொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது !


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (25) காரைநகர் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 10 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.