குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !


தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் ”குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில் சில இடங்களில் காலாவதியான பாவனைக்குதவாத அரிசி வழங்கப்படுவதாகக் குற்றசாட்டு எழுந்துள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கிராம சேவகர் ஊடாக, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.