வைத்தியர் எனக் கூறி சிறுவனின் தங்க நகைகள் கொள்ளை !


குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை தனது தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை வைத்தியர் போல நடித்து ஏமாற்றி திருடிச் னெ்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

இதன்போது, தன்னை வைத்தியர் எனக் கூறிய நபரொருவர் சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போடுமாறு கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நபர் வைத்தியசாலையில் உள்ள கதிரையில் சிறுவனை அமரச் செய்து தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.