ஸ்ரீ தலதா வழிபாடு ;புனித தந்ததாது புகைப்படம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை !


கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது புனித தந்ததாதுவை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தப் படம் 2025 ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் விகாரைக்கு சென்ற ஒரு பக்தர் எடுத்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

எனினும், மத அனுஷ்டானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதோ அல்லது நினைவுச்சின்னத்தை புகைப்படம் எடுப்பதோ கட்டாயம் தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைகாக குறித்த படம் தலதா வழிபாட்டின் போது எடுக்கப்பட்டதா, அது ஒரு பார்வையாளரால் எடுக்கப்பட்டதாக அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சிஐடி தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.