திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிஸார்

ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருரையும் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 6.00 மணியளவில் ஹட்டன் நகரின் சைட் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பட்டையடுத்து விரைந்து செயற்பட்ட ஹட்டன் பொலிஸார் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கினர்.

இந்நிலையில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இரவு 11.30 மணியளவில் நோர்வூட் வென்ஜர் கீழ் பிரிவிலுள்ள குடியிருப்பிருப்பு ஒன்றினை சோதனையிட்ட போது, காணாமல் போன குறித்த மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் இருவர் தொடர்புப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் தலைமைறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் மற்றும் நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.