அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நவம்பர் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிணை வழங்கப்பட்ட பின்னர், ஏனைய இரு சந்தேக நபர்களும் இந்த மாதம் 13 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.