ஈரான்-இஸ்ரேல் மோதல் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை இலங்கை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
தற்போதைய சூழ்நிலையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் அல்லது அங்கு வருகை தரும் அனைத்து இலங்கையர்களும் அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

அதன்படி, இந்த காலகட்டத்தில் இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இலங்கை தூதரகங்களும் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கங்களை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, இலங்கையர்கள் அவசர தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

📍 Embassy of Sri Lanka – Israel

▪️ +94 71 844 7305 – Deputy Head of Mission
▪️ +94 71 683 3513 – Advisor (Labour Welfare)
▪️ +94 71 974 2095 – Second Secretary (Labour Welfare)
(WhatsApp – Emergencies only)

📍 Embassy of Sri Lanka – Tehran

▪️ Mr. K.G.U. Lakmal, Chargé d’Affaires a.i..
▪️ +98 939 205 5161
(WhatsApp – Emergencies only)