
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பஸ்வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதிகள் நடத்துனர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் பிரயாணி ஒருவர் காயமடைந்து நிலையில் வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தனியர் பஸ்வண்டி நடத்துனர் அவரின் உதவியாள் உட்பட இருவரை இன்று சனிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இருந்து வவுனியாவுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ண்டியும் அக்கரைப்பற்றில் இருந்து புத்தளத்துக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்வண்டியும் சம்பவதினமான இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து இரு பஸ்வண்டிகளும் ஒரே நேரத்தில் போக்குவத்தை ஆரம்பித்தது.
இதன் போது பிரயாணிகளை ஏற்றும் நடவடிக்கையில் இரு பஸ்வண்டிகளும் முன்னுக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு பிரயாணித்தனர் இதனால் இரு பஸ்வண்டி நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே பெரும் முறுகல் ஏற்பட்டது
இதனையடுத்து பிரயாணிகள் காலை உணவு உண்பதற்காக 8.45 மணியளவில் வாழைச்சேனை நாவலடி சந்தியிலுள்ள உணவகத்தில் இரு பஸ்வண்டிகளும் முன்னுக்கு பின்னர் நிறுத்திய நிலையில் இரு பஸ்வண்டி நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே வாய்தர்கம் முற்றி அடிபிடியில் ஈடுபட்டனர் இதன் போது இதனை தடுக்க சென்ற பிரயாணி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவத்தையடுத்து தனியார் பஸ்வண்டி நடத்துனர் அவரது உதவியாளர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.