சிறுவனை கடத்திய வேனை தேடி தீவிர விசாரணை



கஹதுடுவ பகுதியில், குடும்பத்தின் ஒரே பிள்ளையான 15 வயது சிறுவன் ஒருவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டபோது, இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனிலிருந்து குதித்துள்ளான்.
 
அதன்படி, இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

சிறுவனைக் கடத்திய குழுவைக் கண்டறிய, கஹதுடுவ பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.