.jpg)
வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்களை, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயினுடன் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வாழைச்சேனையில் இருந்து பேருந்தில் வந்து இறங்கிய குறித்த இரு இளைஞர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழையைச் சேர்ந்த 24 வயதுடையவர் மற்றும் வாகரையைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



.jpg)




.jpg)



.jpeg)