
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள தனது காணியில் பயிரப்பட்ட பயிர்களை காட்டு விலங்குகளில் இருந்து காப்பாற்றுவதற்காக காணி உரிமையாளர் காணியை சுற்றி சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)





.jpg)

