கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு !


மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு,

சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது ஒரு திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலையா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட கோபத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.