விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பான ‘அத தெரண’ விசேட நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.













