அட்டன் வனப்பகுதியில் மரையை வேட்டையாடிய இருவர் கைது !


..அட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மரை ஒன்றினை வேட்டையாடிய இரண்டு சந்தேக நபர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு, அட்டன் வனப்பகுதி அதிகாரிகள் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மரைகள் உள்ளன. இதனால் தொடர்ந்து இவ் இரண்டு சந்தேக நபர்களும் சுற்றித் திரியும் மரைகளை வேட்டையாட கம்பி வலைகளை பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 54 கிலோ எடையுள்ள கம்பி வலை, இறைச்சி மற்றும் சந்தேக நபர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட பல கத்திகள் மற்றும் வேட்டையாடிய மரையையும் கைப்பற்றியுள்ளதாக அட்டன் வனப்பகுதி அதிகாரி கவிது ருக்ஷன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட, சந்தேகநபர்களும் நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் பகுதியை சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் இறைச்சியுடன் செவ்வாய்க்கிழமை (10) இரவு அட்டன் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை 18 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் மரை இறைச்சியை மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.