மின்சாரக் கட்டணத் திருத்தம்: இன்று பிற்பகல் அறிவிப்பு


நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை (30) வெளியிடவுள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.