இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு



எரிவாயு விலை உயர்வு  காரணமாக  அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று (11) நள்ளிரவு முதல் சில உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதன்படி

பிளேன் டீ – ரூ.5 உயர்வு

பால் டீ – ரூ.10 உயர்வு

ஷார்ட் ஈட்ஸ் – ரூ.10 உயர்வு

சோறு பாக்கெட் மற்றும் கொத்து – ரூ.25 உயர்வு

சமீபத்தில் எரிவாயு விலை அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.