பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு



உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட பிரேசில் அணி, நோர்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பெரும் ஏமாற்றமடைந்த நெய்மர் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கான ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.