கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு



கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று வியாழக்கிழமை (2) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயானத்திற்கு சென்றிருந்த நபர் ஒருவர் அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், குண்டுகளை செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப்படையினருக்கும் அறிவித்தனர்.

இதனையடுத்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை (3) குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.