கம்பஹா பகுதியில் அரிய வகை வனவிலங்கு பாகங்களுடன் பெண் கைது!


கம்பஹா, கலகெடிஹேன பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக அரிய வகை வனவிலங்கு பாகங்களை வைத்திருந்த பெண் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.