புகையிரதத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிடும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதன் மூலம் புகையிரத சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் என்பன பாரிய ஆபத்துக்கு உள்ளாகுவதாலேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சுற்றறிக்கையின் கீழ்,புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி,புகையிரத பொது முகாமையாளர்,புகையிரத உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, புகையிரத பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.jpg)

.jpg)

.jpg)
.jpg)


.jpg)
.jpg)
