மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணித்தியால நீர் வெட்டு – நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (22) நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆகஸ்ட் 22 முதல் நாளாந்தம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை இந்த நீர் விநியோகத் தடை தொடரும் எனவும், பொதுமக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.