(தியாஷினி)
கிழக்கு
மாகாண சமுகசேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள்
பிரிவினால் அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் வலுவிழந்த ஒரு
பயனாளிக்கு சக்கர நாற்காலியொன்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு நேற்று (23) ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இச்சக்கர நாற்காலியைக்
குறித்த பயனாளியின் சார்பில் அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில்
பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த கிராமசேவகர்
பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்
கலந்துகொண்டனர்.