அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பகுதியிலிருந்து கிட்டங்கி வீதியூடாக மண்டூருக்கு புதன்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில், ஒருவர் வெள்ளத்தில்; அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
காக்காச்சிவட்டையைச் சேர்ந்த யோகராஜ் (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நிலையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தப்பிவந்த மற்றையவரான ஆணைகட்டியவெளியை சேர்ந்த என்.சுபராஜ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக மருதமுனைக்கு வந்த இருவரும் கிட்டங்கி வீதியூடாக பயணித்துள்ளனர். வெள்ளம் காரணமாக கிட்டங்கி வீதியூடான போக்குவரத்து கடந்த 5 நாட்களாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களின் தேவை கருதி கடற்படையினர் இயந்திரப்படகு சேவையை ஆரம்பித்துள்ளனர். இதை அறியாது மேற்படி வீதியூடாக மோட்டார் சைக்களில் பயணித்த இவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் நீந்தி துரைவந்தியமேடு கிராமத்தைச் சென்றடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது
காக்காச்சிவட்டையைச் சேர்ந்த யோகராஜ் (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நிலையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தப்பிவந்த மற்றையவரான ஆணைகட்டியவெளியை சேர்ந்த என்.சுபராஜ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக மருதமுனைக்கு வந்த இருவரும் கிட்டங்கி வீதியூடாக பயணித்துள்ளனர். வெள்ளம் காரணமாக கிட்டங்கி வீதியூடான போக்குவரத்து கடந்த 5 நாட்களாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களின் தேவை கருதி கடற்படையினர் இயந்திரப்படகு சேவையை ஆரம்பித்துள்ளனர். இதை அறியாது மேற்படி வீதியூடாக மோட்டார் சைக்களில் பயணித்த இவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் நீந்தி துரைவந்தியமேடு கிராமத்தைச் சென்றடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது