மட்டு நகர் வாவிக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு


(மாறன்)

மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூ வீதிக்கு முன்னாள் உள்ள வாவிக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு சம்பவதினம் இரவு 7.30 மணிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்குச்  சென்று சுமார் 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்

குறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.