களுவாஞ்சிக்குடி மாங்காட்டில் டிப்பர் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

(படுவான் நிருபர்)
மாங்காடு மட்டக்களப்பு கல்முனைப் பிரதான வீதியில் டிப்பர் வான் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் இச் சம்பவமானது இன்று (20) அதிகாலை 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓந்தாச்சிமடத்திலிருந்து வெளிநாடில் இருந்து வருபவரை ஏற்றுவதற்கு கட்டு நாயக்க விமான நிலையத்தை நோக்கி சென்ற வான் மற்றும் கல்முனை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலே இக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது .

இதில் வேனில் மூன்று பேர் பயணித்ததில் வேனில் பயணித்த இ.தினேஸ்காந் (ஓந்தாச்சிமடம்) வயது- 28 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வேனில் பயணித்தவர்களுக்கும் டிப்பரில் பயணித்தவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டு தற்போது மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேனில் பயணம் செய்த சாரதி உட்பட  இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது,

வேனுடன் டிப்பர் மோதுண்டதில் வேன் குடை சாய்த்து மின்கம்பத்துடன் மோதி மின் கம்பம் முறிந்து வேனின் மீது விழுந்ததில் வேன் முழுவதுமாக விபத்துக்கு உள்ளாகியதில் வேனில் பயணித்தவர்களுக்கு பலத்த காயமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை களுவாஞ்சிக்குடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.