குருமண்வெளி சக்தி சனசமூக நிலையத்தை தரம் உயர்த்துமாறு கோரிக்கை



(செ.துஜியந்தன்)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கிவரும் சக்தி சனசமூக நிலையத்தினை தரம் உயர்தித்தருமாறு சக்தி சனசமூக நிலைய நிர்வாக சபையினர் பிரதேச அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
குருமண்வெளிக் கிராமத்தில் பல வருடங்களாக நான்கு பத்திரிகைகளுடன் மட்டும் இந் நூல்நிலையம் இயங்கிவருகின்றது. குறித்த சனசமூக நிலையக்கட்டிடத்தில்தான் கிராமசேவையாளர் அலுவலகமும் இயங்கிவருகின்றது. 

இங்கு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பு ஆகியன இல்லாதுள்ளது. இதனால் சனசமூக நிலையத்தை பயன்படுத்துபவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அத்துடன் கிராம மாணவர்கள் பயன்பெறக்கூடியளவிற்கு கல்வி சார்ந்த நூல்கள், கதைப்புத்தகங்கள் எதுவுமில்லாதுள்ளது. பேரளவில் மாத்திரம் பத்திரிகையுடன் குருமண்வெளி நூல் நிலையம் இயங்கிவருகின்றது. இந் நூலகத்திற்க்கு நிரந்தர நூலகர் ஒருவரை நியமித்தும் குடிநீர், மின்சாரவசதிகளை ஏற்படுத்தித்தருமாறு சனசமூக நிலையத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.