வறட்சியான காலநிலை காரணமாக 4 லட்சம் பேர் பாதிப்பு



தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறுஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வன பகுதிகளுக்கு தீ வைப்பதனை தவிர்த்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.