பிரதேச அபிவிருத்தி வங்கியினரால் நடத்தப்பட்ட தைபொங்கல் விழா



(மண்டூர் ஷமி)

களுவாஞ்குடி பிரதேச அபிவிருத்தி வங்கியினரும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, மாணிக்கப்பிள்ளையார் பால்ப்பண்ணையாளர்கள் சங்கம் உமாமகேஸ்வரி சேமிப்பு கடன் மத்திய நிலையம் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா தம்பலவத்தை பிள்ளையாரடியில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு பின்னர் பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் வரவேற்பு உரையினை களுவாஞ்சிகுடி பிரதேச வங்கியின் முகாமையாளர் யோ.செந்திலிநாதன் நிகழ்த்தினார். இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக மாகாண பொது முகாமையாளர் ரற்தனிய, உதவிப் பொதுமுகாமையாளர் அத்துல முமார மாவட்ட முகாமையாளர் அஷ்ரப் வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் கே.சத்தியநாதன், மட்டு அம்பாறை ஜனநாயகப்போராளிகள் கட்சியின் அமைப்பாளர் நா.நகுலேஸ், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரும் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் ஊடகப்பசே;சாளருமான ப.கோணேஸ் பொதுமக்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய இந்நிகழ்வின் பொது மாணவர்களின் நடன இசை நிகழ்வுகளும் தைப்பொங்கல் விழாவினை சித்தரிக்கும் முகாமாக மாட்டு வண்டில்களின் பவனி சோளம் அறுபடையும் நடைபெற்றது.