வின்சென்ட் தேசிய பாடசாலையின் முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

(வேனுகா)

மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையின் முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி கரணியா சுபாகரன் தலைமையில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் வி.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இன்று காலை நடைபெற்ற இந்த வரவேற்கும் நிகழ்வில் மும் மத இறை பிரார்த்தனை, வரவேற்பு பேச்சு ஆசிரியர் வரவேற்பு, மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு பாடசாலையின் இரண்டாம் தர மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

 கிழக்கு பல்கலைகழக பொருளில் விரிவுரையாளர் திருமதி ஜெயப்பிரபா சுரேஸ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர் மற்றும் .மட்டக்களப்பு வலய கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் வின்சென்ட் தேசிய பாடசாலையின்  பழைய மாணவர்கள் புதிய மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும்  பாடசாலை அபிவிருத்திச் சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.