கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக சங்கரப்பிள்ளை-சசிகரன் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு வருகின்றார்.இந்நிலையில் கிழக்கு மாகாண புதிய ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ் அவர்கள் மீண்டும் இவரை அப்பதவிக்கு மீள்நியமனம் செய்துள்ளார்.முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன் தனது கடமையை இன்று(11)பிற்பகல் 3.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வாறு கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முகம்மத்,முன்பள்ளி பணியகத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுப்பணிப்பாளர்களான எஸ்.எம்.புஞ்சிபண்டா,ஏ.எஸ்.எச்.சைபீடின் மற்றும் பணியகத்தின் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.