நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பென அச்சம் – இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் பலி


குண்டு வெடிப்பு தொடர்பான புதிய செய்திகளை தெரிந்துகொள்ள
LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள் 

இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.இரண்டு வெளிநாட்டவர்களும் பலியென தகவல்.நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென நம்பப்படுகிறது.


உயிரிழந்த ஒருவரின் தலைப்பகுதியை கண்டுள்ள பொலிஸார் அதுகுறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு – நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் இரத்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் உறவினர்கள் திரண்டுள்ளதால் அங்கு பெரும் நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு வெடிப்பில் 24 பேரும் நீர்கொழும்பு வெடிப்பில் 50 பேரும் மட்டக்களப்பில் 25 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்.

காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சற்றுமுன் நட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மக்கள் அமைதியாக இருக்குமாறும் படையினர் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்

செய்திகள் உடனுக்குடன் எமது பேஸ்புக்கில் பதிவேற்றப்படும்


https://www.facebook.com/battinews

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்