இதுவரை 27 பேர் பலி .
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர் ,
இத் தாக்குதலானது தற்கொலை தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளதுடன். தற்கொலையை மேற்கொண்டவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியானவர்களில்
21 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது .
69 பேர் படுகாயமடைந்துள்ளனர் இதில் இருவர் கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் .
இறந்தவர்களில் :
14 வயதுக்கு உட்பட்டோர் - 14 பேர் - 10 பெண்கள் , 4 ஆண்கள்
வயதானவர்கள் - 8 ஆண்கள் , 5 பெண்கள்
இதேவேளை, இலங்கையின் 6 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து கிறிஸ்தர்வர்களின் தேவாலயங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE UPDATES CLICK HERE http://www.battinews.com/2019/04/srilanka-blast-live-updates.html
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்