உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி

இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 வரை அதிகரித்துள்ளது.காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை தாக்குதல்கள் கூடுதல் அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஒரே குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் சொல்கின்றனர்.

 இறந்த வெளிநாடடவர்களில்   துருக்கியை சேர்ந்த  இருவரும் ,   டர்ச் ஒருவரும் ,

ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதல் சி சி ரி வி யை புலனாய்வு செய்ததில் இரண்டு பேர் சுமார் 25 கிலோ எடையுள்ள பொருளை தூக்கி வருவது தெரியவந்துள்ளது.

தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரில் இருந்து சின்னமன் கிராண்ட் ஹோட்டலின் குடிநீர் போத்தல் ஒன்று இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தெமடகொடையில் பதிவான குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபரங்கள்

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

 …. http://www.battinews.com/2019/04/srilanka-blast-live-updates.html