கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை – இராணுவத்தளபதி


வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எமது விருப்பம். சட்டம், ஒழுங்கை மீறும் வகையில் எவரேனும் செயற்பட முடியாது.

அப்படிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால் கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்“ என குறிப்பிட்டுள்ளார்.